4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது நபர்!அலறிய சிறுமியின் சித்தி!

Default Image

கோவையில் உள்ள துடியலூரில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளது.இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு புகுந்துள்ளது.இதனால் அச்சம் அடைந்த தம்பதியினர் அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அங்கேயே கூலிவேலை பார்த்து வந்துள்ளனர்.வழக்கம் போல் அவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் சென்றுள்ளார்.இதனால் அச்சம் அடைந்த சிறுமியின் சித்தி எல்லா இடங்களிலும் தேடி சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 45 வயதான செல்வராஜ் என்ற நபர் தனது வீட்டின் படுக்கை அறையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருந்துள்ளார்.இதை கண்ட சித்தி அச்சத்தில் அலறி சத்தம்போட்டுள்ளார்.

இதனால் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை பலமாக தாக்கியுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சமூக நலத்துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் போக்சோ பிரிவின் படி செல்வராஜை கைது செய்துள்ளனர்.

4 வயது சிறுமிக்கு 45 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi