47-ஆவது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது… நுழைவு கட்டணம் ரூ.10..

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-வது புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று தொடங்கி உள்ள 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 வரையும், வேலை நாட்களில் 2 முதல் 8.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்

புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 47-ஆவது சென்னை புத்தக கண்காட்சியையொட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உரைநடை – பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கவிதை – உமா மஹேஸ்வரி, நாவல் – தமிழ்மகன், சிறுகதை – அழகிய பெரியவன், நாடகம் – வேலு.சரவணன் மற்றும் மொழிபெயர்ப்பு –  மயிலை பாலுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர் உதயநிதி, முதல்முறையாக ஒரு பதிப்பாளராக புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உள்ளேன். வாசிப்பு பழக்கம் என்பது ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதன் அடையாளமாகும். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் தர துணை நிற்கும் புத்தகங்களை போற்றுகின்ற அரசாக ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என்றார்.

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

21 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

35 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

1 hour ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago