47-ஆவது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது… நுழைவு கட்டணம் ரூ.10..

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-வது புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று தொடங்கி உள்ள 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 வரையும், வேலை நாட்களில் 2 முதல் 8.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்

புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 47-ஆவது சென்னை புத்தக கண்காட்சியையொட்டி 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உரைநடை – பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கவிதை – உமா மஹேஸ்வரி, நாவல் – தமிழ்மகன், சிறுகதை – அழகிய பெரியவன், நாடகம் – வேலு.சரவணன் மற்றும் மொழிபெயர்ப்பு –  மயிலை பாலுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர் உதயநிதி, முதல்முறையாக ஒரு பதிப்பாளராக புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உள்ளேன். வாசிப்பு பழக்கம் என்பது ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதன் அடையாளமாகும். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் தர துணை நிற்கும் புத்தகங்களை போற்றுகின்ற அரசாக ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என்றார்.

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

33 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago