தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேருக்கு ஒரே தொற்று என்றும் அதில் 8 பேர் ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள். இவர்கள் மூலமாக 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் 4 பேர் சென்னை மற்றும் ஒருவர் வெளிநாடு சென்று வந்தவர் என மொத்தம் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்து, 8 ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேர் இருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 6,095 மாதிரிகள் பரிசோதனை செய்யப்டுள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 32,075 பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டதில் 21 பேர் குணமடைந்துள்ளார்கள். பின்னர் 344 பேரின் முடிவு வரவேண்டி இருக்கிறது என்றும் தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் போதிய முகக்கவசங்கள் கைவசம் இருக்குறது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…