பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளையம்பலத்தை சேர்ந்த ஜோஸப் ஜான் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து ஐந்து வயது பெண் குழந்தையை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்துள்ளனர். குழந்தையை வைத்துக்கொண்டு கையில் மற்றொரு சிறுவனுடன் இவர்கள் இருவரும் சுற்றி திரியும் பொழுது அப்பெண் குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் இருவரின் மேலும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். இது குறித்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த பொழுது அவர்கள் இருவருமே தங்கள் குழந்தை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் முரணான பதிலால் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பெண் குழந்தையை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியை சேர்ந்த கார்த்திஸ்வரி என்பவரது மகள் எனவும் தனது பெயர் லோகிதா எனவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன சிறுமி குறித்து ஏதேனும் புகார்கள் உள்ளதா என விசாரித்த பொழுது பெங்களூரில் சிறுமியின் பெற்றோர் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பெங்களூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாருடன் இணைந்து சிறுமியின் தாயாரும் தற்பொழுது கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தி குழந்தையை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…