BREAKING: சென்னையில் இன்று 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று..!

சென்னையில் இன்று 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 46 குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 105 பேரில் 50 பேர் சென்னை சார்ந்தவர்கள், இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 4 முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் , ஒரு பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.