இன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட முடிவில் தேர்வு எழுதிய 9,39,829 பேரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், 10 வகுப்பு தேர்வை எழுத 9,45,007 விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடந்து, மீதமுள்ள 5,248 பேரின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 5,248 மாணவர்கள் விடுப்பட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை, விடுப்பட்டவர்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
அதில், காலாண்டு, அரையாண்டு, தேர்வு எழுதாத பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 பேர் தேர்ச்சி பெறவில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியைவிட்டு நின்ற மாணவர்கள் 658 பேரும் தேர்ச்சியில்லை, பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தபின் 231 மாணவர்கள் உயிழந்துள்ளனர் அதனால் தேர்ச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…