எந்த அடிப்படையில் மதிப்பெண்.!?5-8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published by
kavitha
  • தமிழகம் முழுவதும் 5,8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடைபெறுகிறது.
  • மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்குத்தான் எழுத்து தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்ட அறிக்கையில்  தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைகளானது கடந்த 2012-13ம் ஆண்டு முதல் நடைமுறையில்  உள்ள முறைகளின் கீழ் வளரறி (Formative Assessment) மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் மற்றும் தொகுத்தறி (Summative Assessment) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பெண் முறைகளில் வளரறி மதிப்பீடு என்பது FA+FB என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. FA வில் புராஜெக்ட் மற்றும் மாதிரிகள் வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவைகளுக்கு பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல்FBயின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும் சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொகுத்தறி மதிப்பில் நடத்தப்படும் பாடப்பகுதியில் இருந்து கேள்வித்தாள் தயாரித்து பள்ளி  அல்லது வட்டார மற்றும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரித்து  60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி பொதுத் தேர்வின்போது கடந்த 22.10.2019ம் தேதியில் அறிவித்தபடி FA, FBல் வழங்கப்பட்ட 40 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொகுத்தறிவு முறையின் கீழ் வழங்கப்பட உள்ள 60 மதிப்பெண்களுக்கான தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும்

அவ்வாறு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த சிஆர்சி மைய அளவில் மாற்றி அனுப்பி அதில் திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர் மேலும், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கூடாது என்று அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

14 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

16 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago