கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த வகையில் மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி சஹரா கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் தங்கள் சகோதரர், சகோதரிகள் மாயாண்டி பட்டி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று மீண்டும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மேலும், தங்களது சகோதரிகள் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு காட்டுவழியாக ஒத்தையடி பாதையில் வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் , இதனால் தங்கள் பகுதியில் இருந்து மாயாண்டி பட்டி மேல்நிலை பள்ளிக்கு செல்ல அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென அந்த கூட்டத்தில் மாணவி சஹரா கூறினார்.
இந்நிலையில், மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மாணவி சஹானாவை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று மாயாண்டிபட்டி முதல் மீனாட்சிபுரம் வரையில் மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். மேலும் தினமும் காலையும், மாலையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மாணவியின் கோரிக்கையை ஏற்று பேருந்து வசதியை பெற்று தந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனிடையே 5ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையானது மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு வீடியோ மூலம் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…