தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை தொடங்கப்பட்டதை அடுத்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இதில், தமிழக அரசு பள்ளியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகள் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…