தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550ஆக அதிகரித்து உள்ளது. மேலும் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 31 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை சென்னையில் மட்டும் 1,724 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசிதழிலையும் அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் 189 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 21 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…