தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 55 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டுமே 178 பேர் குணமடைந்து, மொத்தம் 635 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து இன்று ஒரே நாளில் 6,060 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 53,045 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 1,596 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 940 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 22,254 பேர் இருக்கின்றனர். அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளனர். மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து இதுவரை 87,159 பேர் வீடு திருப்பியுள்ளார்கள். இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு 358 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…