துபாயிலிருந்து சென்னைக்கு 8 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வை எண்ணினால் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது கனவாகிவிடும் என்பது போல் உள்ளது. இருந்தபோதிலும், தங்க கடத்தல் செயல்களும் ஆங்காங்கு நடைபெறுகிறது. நேற்று துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் வந்தது.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் விமானம் சென்னைக்கு வந்த பிறகு, அதிலிருந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் இரண்டு நபர்கள் கேள்விகளுக்கு முரணாக பதில் அளித்துள்ளனர். அதனால் அவர்களின் உடமைகளை சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அரிசி குக்கர், ஜுசர், மிக்சி ஆகிய வீட்டு உபயோக பொருட்களில் உள்ள மோட்டர்களில் தங்கத்தை மறைத்து வைத்துள்ளனர். ரூ.4 கோடியே 3 லட்ச மதிப்பிலான 8 கிலோ 170 கிராம் அளவிலான தங்கத்தை இவர்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடத்தி வந்த இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…