தமிழகத்தில் நாளை 8 -வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 7 வாரங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 5 வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முகாம் கடந்த இரண்டு வாரங்கள் மது பிரியர்கள் மற்றும் அசைவ விரும்பிகளுக்காக சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் எனவும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அதிகம் கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தாலும் இன்னும் தடுப்பூசி போடவேண்டிய நபர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…