தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு பிறகு டெங்கு பாதிப்பு குறையும் என தெரிவித்தார். அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9,150ஆக உயர்ந்துள்ளது. கோவை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணர்வகள் சேர்க்க அனுமதி கிடைத்திருக்கிறது.
டெங்கு குறித்து மத்திய அரசின் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளது. நீட் விலக்கு மசோத தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாளை சென்னையில் 750 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…