தமிழக ரிப்போர்ட் : கொரோனா சிகிச்சையில் 922 பேர்.! குணமடைந்தவர்கள் 1,210 பேர்.!

தமிழகத்தில் இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழகத்தில் இன்று புதியதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், 2058ஆக இருந்த எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே இன்று 94 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025