கரூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி.!

Published by
Castro Murugan
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த நோயாளிகளும் கரூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கரூர் மண்டலமாக கருதப்படும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 95 வயது நிரம்பிய மூதாட்டியும் பூரண குணமடைந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Castro Murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago