அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025