மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் ஆவார்.இவர் மல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார்.இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.இந்நிலையில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.
அப்போது யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…