ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டி பாளையத்தின் அருகே டிஎன்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆவார்.இவரது மனைவி அன்னக்கொடி ஆவார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
மேலும் தேவராஜுக்கு சரவணன் என்ற ஒரு தம்பியும் உள்ளார்.அவர் அதே பகுதியில் அவருடைய அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சரவணன் அன்னக்கொடியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தேவராஜிடம் அன்னக்கொடி கூறியுள்ளார்.பின்னர் தேவராஜ் சரவணனை அழைத்து கண்டித்துள்ளார்.இந்நிலையில் கவுந்தப்பாடி வேலம்பாளையத்தில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு அன்னக்கொடி மகனுடன் சென்று தங்கியுள்ளார்.
அங்கிருந்து கொண்டே ஒரு பள்ளியில் மகனை விடுவதும் பின்னர் மாலை அளித்து வருவதுமாக இருந்துள்ளார்.இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவந்துள்ளது.அப்பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு அண்ணிக்காக காத்திருந்துள்ளார்.
பின்னர் பள்ளியில் இருந்து மகனை அழைத்து வரும் அன்னக்கொடியை பார்த்ததும் கையில் வைத்திருந்த கத்தியால் அன்னக்கொடியை வயிறு, மார்பு என பல இடங்களில் சரமாரி குத்தியுள்ளார்.
இதனால் அன்னக்கொடியை ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டுள்ளார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறன.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…