RedPix CEO Felix [File Image]
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம்.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பேட்டி வீடியோவை வெளியிட்ட தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை கிரைம் போலீசார், திருச்சி போலீசார், சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.
இதில், ஏற்கனவே சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் கோவை மற்றும் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், இன்று , யூ-டியூபர் பெலிக்ஸ் கோவையில் பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து பெலிக்ஸ் தற்போது திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் திருச்சி போலீசாருக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…