என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

Published by
மணிகண்டன்

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் அமைப்புகள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றன.

ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின் படி, இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய சங்கிதா (BNS) எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்கிதா (BNSS), எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) எனவும் இந்தியில் பெயர் திருத்தம் செய்து அதில் குறிப்பிட்ட மாற்றங்களையும் செய்துள்ளனர்.

இந்த புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், புதிய குற்றவியல் சட்டத்தின் பெயரை படித்து விட்டு, “என்னது சங்கீதாவா.? ” என பாரதிய நியாய சங்கிதா சட்டத்தின் பெயரை படித்துவிட்டு, ” இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம் என்று ஆதிகாலத்தில் இருந்து சொல்கிறோம்.”  என விமர்சனம் செய்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியை நேரடியாக திணித்தால் எதிர்ப்போம் என தெரிந்து, சட்டத்துறையில் தற்போது லேசாக திணித்துள்ளனர். பெயரில் மட்டுமல்லாது அதில் சில திருத்தங்களையும் செய்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றத்தில் இந்தி பெயரை உச்சரிக்க வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் இந்தி பழக்கமாகிவிடும். அதற்காக தான் இந்த பெயர் மாற்றம். நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தை சட்டத்திருத்தம் என்று பெயரில் திணிக்க பார்க்கிறார்கள்.

இதனை எதிர்த்து முதலில் குரல் எழுப்ப வேண்டியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும். அவர் தான் இதனை ஆரம்பத்தில் அவர்களே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இதனை உச்சநீதிமன்றம் குப்பை தொட்டியில் வீசியிருக்க வேண்டும். இது ஒரு சர்வாதிகார போக்கு என்று அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago