தமிழ் மொழிக்கு இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Published by
பாலா கலியமூர்த்தி

அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற “எண்ணி துணிக” நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் றவு தமிழ் ஆளுமையுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு எனக்கு தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தெரியாது.

இங்கு வந்த பின்னர் திருக்குறள் படிக்க தொடங்கினேன். திருக்குறள் ஆங்கில மொழிப்பெயப்பை படிக்கும்போது, தமிழ் மொழியின் மீது ஆழமான அன்பு ஏற்பட்டது. நான் ஆளுநரோ, இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டேன். தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்.

அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை. தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே, வேறு மொழிகள் இல்லை என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் அல்ல, உயிரினம் கஷ்டபடுவதை பார்த்து கவலைகொள்வதும் ஆன்மிகம் தான் என்றார். மொழிதான் மக்களின் ஆன்மிகமாக உள்ளது. மக்களின் கலாச்சாரம், பண்பாட்டை விளக்குகிறது என்றார். மேலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற “எண்ணி துணிக” நிகழ்ச்சியில் 42 தமிழ் ஆளுமைகளுக்கு திருமுறை திருமகன், திருமுறை திருமகள் விருதுகளை ஆளுநர் வழங்கினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

11 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

13 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

14 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

14 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

16 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

16 hours ago