வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…வானிலை மையம் தகவல்.!!

Published by
பால முருகன்

தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ” கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

60 இடங்களில் கனமழை, 11 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “வரும் மே 6-ஆம்  தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும், நீலகிரி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும்,  சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும்  தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவி (கடலூர்) 19, சங்கரி துர்கம் (சேலம்) 17, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15, சாத்தூர் (விருதுநகர்) 14, திருச்செங்கோடு (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) . நந்தியாறு (திருச்சி) தலா 13, எடப்பாடி (சேலம்), சின்கோனா (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 12, புடலூர் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கடலூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), எண்ணூர் AWS (திருவள்ளூர்) தலா 11 என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

39 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago