புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் பகுதியில் உள்ள கள்ளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் ஆவார்.இவரது மகன் அருண்குமார் ஆவார்.21 வயதாகிய இவர் திருப்பூரில் உள்ள தந்து மாமா வீட்டில் ஒருவருடம் தங்கி இருந்து மாமாவின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அருண்குமாருக்கும் அந்த பகுதியில் பிகாம்.சி.ஏ.படிக்கும் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.திருமணம் செய்து கொள்வதாக கூறி அருண்குமார் அந்த பெண்ணை பல இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு நடந்து வந்துள்ளது.ஒரு கட்டத்தில் மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அருண்குமாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்.உயிருக்கு போராடிய நிலைமையில் பெண்ணை பார்த்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இந்த சம்பவம் காரணமாக மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய அருண்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.இதன் காரணமாக 17 வயதே மாணவிக்கு ஆவதால் அருண்குமாரை போக்சோ பிரிவின் படி கைது செய்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…