கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

Published by
லீனா

கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்தவர் செல்வராஜ்(36). இவரது மனைவி ஆக்னஸ் நந்தா(31). இந்நிலையில், செல்வராஜ் ஓமான் நாட்டில் எண்ணெய் கம்பெனி ஒன்றில், பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதனையடுத்து, ஆக்னஸ் தனது இரண்டு பிள்ளைகளுடன், அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தனது கணவருடன் அடிக்கடி போனில் பேசி வந்த ஆக்னஸ், கடந்த இரு தினங்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கணவருடன் நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டிருந்த ஆக்னஸ், திடீரென தனது கையில் இருந்த, பூச்சி மருந்து பாத்திலை திறந்து குடித்துள்ளார்.

பின் தனது கணவரிடம், பை! பை! எனக் கூறியவாறு போன் இணைப்பை துண்டித்துள்ளார். மனைவி விஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அவரது உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனடியாக சென்று பார்த்தபோது, ஆக்னஸ் படுக்கையறையில் நுரை தள்ளியவாறு கிடந்துள்ளார்.

இந்நிலையில், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அஞ்சுகிராமம் போலீசார், அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago