கிசான் திட்டத்தில் முறைகேடு.! வருவாய் துறையினருடன் இணைந்து வேளாண் அதிகாரிகள் விசாரணை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகாரை அடுத்து வருவாய் துறையினருடன் இணைந்து வேளாண் அதிகாரிகள் விசாரணை.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ரூ.6000 நான்கு மாதத்திற்கு ரூ.2000 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தளவில் இதுவரை ஒரு லட்சத்து 79,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதுவும், இதுவரை வேளாண்மை துறை அனுமதியோடு விவசாயிகளுக்கு சென்றுள்ளது. கடலூர் அடுத்த பிள்ளையார் மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.4,000 சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் அடைந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு தனிநபர் தங்களது வங்கிக் கணக்கில் நான்காயிரம் செலுத்தி இருப்பதாகவும் ஆயிரம் ரூபாய் தனக்கு கமிஷனாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின்பேரில் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் நிலத்திற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலும் அதனை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் தான் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் பணமானது செலுத்தப்படும் ஆனால் கடலூரில் விவசாயிகளே அல்லாத 500க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கில் தற்போது ரூ.4,000 செலுத்தப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

1 hour ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

3 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago