விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும்,  விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சிவக்குமார்” இந்த மண் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த்தை யாரும் மறக்க மாட்டோம். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகவேண்டிய ஒரு நபர். ஆனால், இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. புதுயுகம் படத்தில் நானும் விஜயகாந்துடன் நடித்தேன்.

கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், 1996 ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கலைஞர் அவர்களுக்கு ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை விஜயகாந்த் மட்டுமே தனியாக நின்று செலவு செய்து நடத்தினார்.

அந்த விழாவிற்கு பிறகு அடுத்த தேர்தலில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆன பிறகு லட்ச கணக்கில் கடன் இருந்தது. கமல் ரஜினி எல்லாம் அந்த சமயம் உயரத்தில் இருந்தார்கள். அவர்களுடைய உயரத்திற்கு விஜயகாந்தும் வளர்ந்தார்.

ஆனால், மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடைய வீட்டிற்கு சென்று மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். கடன்கள் பலவற்றையும் அடைத்தார். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம்மலுடன் இல்லாதது வேதனை” எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

30 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago