முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி 10.25 லட்சம் நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவல் தினமும் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி அளிக்க வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ,அரசியல் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் கூட ஆன்லைன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். திரையுலகில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விக்ரம், இயக்குனர் முருகதாஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களால் முடிந்த அளவு நிவாரண நிதிக்காக பணத்தை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் பரோட்டா சூரி அவர்கள் 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் தன் மகன், மகளுடைய சார்பில் 25 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…