மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவத்துறை அமைச்சர் தகவல்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்கி வரும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதற்குமுன் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனவும் கூறினார். மேலும், வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…
கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…