[Image Source : Twitter/@VijayFansTrends]
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினியை கௌரவித்த நடிகர் விஜய்.
நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசு வழங்கி கௌரவிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 4000 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவிற்கு வருகை புரிந்த நடிகர் விஜய், ஆங்காங்கே மாணவர்களுடன் அமர்ந்து உரையாற்றினார். இதன்பின் இவ்விழாவில், கல்வி குறித்து பேசிய நடிகர் விஜய், சில அரசியல் குறித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து, தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறார்.
அப்போது, முதலில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் விஜய். அந்த வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார். இதனைத்தொடர்ந்து, மற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து வருகிறார் நடிகர் விஜய்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…