காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவத்தின் 36 வது நாளான இன்று அத்திவரதர் ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.மேலும் கோவிலில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு பால் , பிஸ்கட் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு நள்ளிரவு வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த 35 நாட்களில் 55 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…