ADMK : அதிமுகவில் பிரிந்து சென்றால் அவர்கள் செல்லாத கிழிந்த நோட்டு தான்.! முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு.!

Published by
மணிகண்டன்

இன்று கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் அதிமுக கூட்டணி குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியினர் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியது போல 1.5 கோடி உறுப்பினர்கள் என்பதை 2.5 கோடியாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக கொங்கு மாவட்ட பகுதி செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பூத் கமிட்டி வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும். மகளிர் அமைப்புகள், பாசறை அமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தல் வரக்கூடும் அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் செல்லும் ரூபாய் நோட்டாக இருப்பார்கள். அதுவே அவர்கள் எங்கள் கூட்டணியை விட்டு விலகி சென்றால் அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளாக மாறிவிடுவர். யார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதல்வராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி வைப்போம். அதிமுகவை எதிர்த்தவர்கள் எதிர்காலம் சூனியமாக இருக்கும் என்றும் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிட்டார்.

நேற்று தான் அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை. எனவும் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…

23 minutes ago

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…

1 hour ago

கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…

1 hour ago

ஆசிய தடகள போட்டி – தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…

2 hours ago

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

2 hours ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

3 hours ago