தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அதர்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள், கட்சி உறுப்பினர்களை பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர்.
இதில் அதிமுக, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்த சட்டம் இயற்றியுள்ளதால், விருப்பமனு கட்டணம் செலுத்தியவர்கள் தாங்கள் அளித்த கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 25.11.2019 தேதியில் இருந்து 29.11.2019 தேதிக்குள் விருப்ப மனு கட்டணம் செலுத்திய அசல் ரசீது கொண்டு வந்து பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என அறிக்கையில் அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மறைமுக தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 22.11.2019 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் உரிய அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…