தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அதர்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள், கட்சி உறுப்பினர்களை பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர்.
இதில் அதிமுக, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்த சட்டம் இயற்றியுள்ளதால், விருப்பமனு கட்டணம் செலுத்தியவர்கள் தாங்கள் அளித்த கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 25.11.2019 தேதியில் இருந்து 29.11.2019 தேதிக்குள் விருப்ப மனு கட்டணம் செலுத்திய அசல் ரசீது கொண்டு வந்து பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என அறிக்கையில் அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மறைமுக தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 22.11.2019 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் உரிய அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…