சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!

Published by
மணிகண்டன்

சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார்.

அப்போது சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகில் வந்து கொண்டு இருக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சண்முகத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த சண்முகம் ,கடந்த 2011 முதல் 2016 வரையில் கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் , சண்முகம் குடும்பத்தினர், அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சண்முகம் ஆதரவாளர்கள் உடலை அங்கிருந்து அகற்ற மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

பின்னர் , சண்முகம் ஆதரவாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சண்முகத்தின் உடலை அங்கிருந்து அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சேலம் மாநகர காவல்துறையினர் தற்போது கொலையாளிகளை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago