Chennai Airport -Chennai Electric train
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது.
இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை வரையில் பொதுபோக்குவரத்து முடங்கியது.
மிக்ஜாம் புயல்.! திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
கடந்த 2 நாட்களாக மின்சார ரயில், பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவை ஆகியவை முடங்கின. தற்போது சென்னையில் முக்கிய இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதே போல விமான சேவை குறிப்பிட்ட வகையில் இயக்கப்பட்டது.
இன்று முதல் விமான சேவை வழக்கம் போல முழுதாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையும் வழக்கம் போல துவங்கியுள்ளது (மழைநீர் வடியாத புறநகர் பகுதிகள் தவிர). மாநகர பேருந்து சேவையும் வழக்கம் போல துவங்கியுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் வெளியூர் செல்வதற்கு எதுவாக ஆம்னி பஸ் சேவை துவங்கியது.
கனமழை காரணமாக சென்னையில் 22 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் தற்போது 13 சுரங்கப்பாதையில் முழுவதும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல துவங்கியுள்ளது. இன்னும் 9 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆவின் பால் விநியோகம் இன்று காலை முதல் வழக்கம் போல செயல்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுளளார்.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…