#breaking: எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் – நாளை பிரதமரை சந்திப்பு..!

Published by
Edison

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி பயணம்:

இந்நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள்,கோவை சென்று அங்கிருந்து இரவு விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,அவருடன் தங்கமணி,எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.

பிதமரை சந்திப்பு:

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும்,இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்பார் எனவும் தகவல் வெளியானது.

வழக்கு:

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது,இதனால், திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில்,கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை ஆளுநரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார். இதற்கிடையில்,வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான்,அதிமுக தலைமை டெல்லி சென்றுள்ளது. ஏனெனில்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக -பாஜக கூட்டணி தற்போது வரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

10 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

11 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

11 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

12 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

12 hours ago