ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பாபு முருகவேல் புகார் மனு.
வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், 2ம் கட்ட வாக்குப் பதிவில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையங்களை மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…