edappadi palaniswami [Image source : PTI]
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரையில் மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை வழங்கும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்புக்கு பிறகு அவர்களது தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இதன்மூலம் ஏற்பட்ட நெருக்கடி குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கலாம். மேலும், நாளுக்கு நாள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் பாஜகவின் படுதோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…