அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தமிழகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமாகிய சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஓரிரு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பொழுது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…