அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருவதையடுத்து, போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக அதிமுக தொண்டர்கள் கூடினர். இவர்கள் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை அகற்றியதை தொடர்ந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விடுதியின் முன்பாக போலீசாருடன் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜாராம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளார். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் அதிமுக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…