அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். பொதுச்செயலாளர் பதவி புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் வாயிலாக அர்ப்பணிக்கப்பட்ட பதவி. அம்மா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பதவியை மீண்டும் நாங்கள் பயன்படுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. மற்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர்.
அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சி கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார். அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் தொண்டனாக சேர்க்க பரிசீலினை செய்யப்படும். அது கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…