அதிமுக ஒரு எஃகு கோட்டை, எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது – ஜெயக்குமார்..!

Published by
murugan

கட்சியின் நிலைப்பாடு சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதே என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் சசிகலாவிற்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதில் தலைமை உறுதியாக உள்ளது.

ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது. கட்சியின் நிலைப்பாடு சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதே. சசிகலாவுக்கு அதிமுகவில் எந்தக் காலத்திலும் இடமில்லை; அதிமுக என்பது ஒரு எஃகு கோட்டை, எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது. சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படும் என்பதை அதிமுக நிலைப்பாடு.

டிடிவி தினகரன் இல்லத் திருமணத்திற்கு சென்ற ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா..? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு  அனைத்தையும் கட்சி கவனித்துக்கொள்ளும் என்று பதிலளித்தார். சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது “சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம்.

புரட்சிதலைவர் எம்ஜிஆரின் நோக்கத்தின்படி தொண்டர்கள் இயக்கமாகவே அதிமுக உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலே அதிமுக செயல்பட்டு வருகிறது. எனவே, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago