பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்.
தமிழக சட்டப்பேரவை காலம் நிறைவடைவதை அடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர்.
தேர்தல் தேதியை அறிவித்த பிறகு சட்டப்பேரவை கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜயகாந்த்துடன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது. விரைவில்தேமுதிகவை அழைத்துகூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…