தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும், ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா, அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றும்தான் அதிமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால் தான் அதிமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது என்றும், தேர்தல் நேரத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். அப்படி அவர்கள் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர் என்று தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அன்வர் ராஜாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும், ஓபிஎஸ் – ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம். அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது. இதற்கு தோழமை கட்சிகளும் காரணமல்ல என்றும், அன்வர் ராஜா கூறிய கருத்து தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…