சென்னை:உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜனவரி 3 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி மூலமான வழக்குகள் விசாரணை நிறுத்தப்படுவதாக நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும்,திங்கட்கிழமை (ஜனவரி 3) முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
21 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…