தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த இரு 3 நாளுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். பின்னர் 3 பேரும் மனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் காலியாக உள்ள பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…