Tamil Manila Congress President GK Vasan. [Image Source : ANI]
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்கட்சிகளால் சொல்ல முடியவில்லை என ஜிகே வாசன் விமர்சனம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒரு முடிவில்லா தொடராகத்தான் இருக்கப்போகிறது மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவை தலைமை தாங்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்கட்சிகளால் சொல்ல முடியவில்லை, கூட்டணி தலைவர் யார் என்பதை கூட சொல்ல முடியாத நிலை உள்ளது என விமர்சித்தார்.
இதற்கு முன் பேசிய அவர், பீகார் மாநில பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டமானது முரண்பாடுகளின் கூட்டமாகவே அமைந்துள்ளது. அந்தந்த, மாநிலத்தில் பாஜகவை வெல்ல முடியாத பயத்தில் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என கூறினார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தலைமையிலான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மீது திமுக அரசு வரி சுமையை ஏற்றிகொண்டுள்ளார்கள், மக்கள் சார்ந்த அரசாக செயல்படாமல் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் அரசாக உள்ளது எனவும் கூறியிருந்தார். இதனால், அதிகமான இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெரும், இன்னும் சில மாதங்களில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியை தேடி வர வைய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…