சூழ்நிலை காரணமாக பாஜகவுடன் கூட்டணி.! இபிஎஸ் பேச்சு.!

Published by
மணிகண்டன்

இன்று சேலம், ஓமலூரில் அதிமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக – பாஜக கூட்டணி பற்றியும், திமுகவின் கையெழுத்து இயக்கம் பற்றியும் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், தங்கள் கொள்கையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத கட்சி என்றால் அது அதிமுக தான். கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைந்தது. அப்படி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அது ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் – குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி..!

பாஜக கூட்டணியை நாம் (அதிமுக) முறித்துக்கொண்ட பிறகு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. நாம் மீண்டும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்துவிடுவோம் என திமுகவினர் கூறி வருகின்றனர். அப்படி கூற அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சிறுபான்மையினரை காக்கும் ஒரே கட்சி அதிமுக தான்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், திமுகவினர் மக்களை ஏமாற்றவே, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்து உள்ளனர். இப்படி கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை யாரிடம் கொடுக்க போகிறீர்கள்.? நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மக்களிடம் கூற திமுக ஒன்றுமே செய்யவில்லை.

அரிசி விலை உயர்ந்துள்ளளது. அரசாங்கம் சரிவர செயல்படாததால் மக்கள் அதிகமாக பாதிப்பு அடைந்துள்ளனர் என கடுமையாக குற்றம் சாட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago