காலியாகும் தினகரன் கூடாரம் !முக்கிய நிர்வாகிகள் விலகல் !அடிமேல் அடிவாங்கும் தினகரன்

புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இதன் பின் தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றுள்ளனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தினகரன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதாவது புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார்.அந்தவகையில் தான் புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டார்.தற்போது புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் 40 பேர் விலகியுள்ளனர். புதுவை துணைத் தலைவர், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் என அனைவரும் விலகியுள்ளனர்.மேலும் ராஜினாமா கடிதத்தை தினகரனுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.ஏற்கனவே தமிழகத்தில் முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ள நிலையில் தற்போது புதுவையிலும் நிர்வாகிகள் சென்றுள்ளது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025