தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால்,கடந்த 10 ஆம் தேதியிலிருந்து மே 24 ஆம் தேதி வரை சிலதளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்,கொரோனா பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்,மாநில அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனுக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில்,கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி,இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள 13 கட்சிகளின் சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக,ஒவ்வொரு கட்சியில் இருந்தும் சுமார் 2 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில்,கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கட்டுபடுத்த தமிழக அரசு செய்து வரும் பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…